Saturday, January 3, 2009

ஏளனத்தை கண்டு அஞ்சாதவர்!!

அமெரிக்காவின் அதிபராக ஆபிரகாம் லிங்கன் உயர்ந்திருந்த நேரம்.

"ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் அதிபரா?" என ஒரு மேட்டுக்குடித் திமிர் பிடித்த ஒருவன் லிங்கனைக் கேலி செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் "நான் அணிந்திருக்கும் செருப்பு உன் அப்பா தைத்தது தான்" என்றானாம்.

உடனே அவனுக்குப் பதில் சொன்ன லிங்கன்-
"இதிலிருந்து புரிகிறது என் தந்தை ஒரு சிறந்த தொழிலாளர் என்பது! இவ்வளவு நாளாக உழைத்து வருகிறதே; பராவாயில்லை! அது அறுந்து விட்டால் என்னிடம் கொண்டுவா; நான் தைத்துத் தருகிறேன். ஏனென்றால் எனக்குச் செருப்புத் தைக்கவும் தெரியும்" என்றாராம்.

கேட்டவர் தலையைக் குனிந்து கொண்டு
நடக்க ஆரம்பித்திருக்கிறார்.

தாழ்வு மனப்பான்மை இன்மை - தொடர் தோல்விகளில்
மனம் தளராமை - கேலிப்பேச்சால் ஒடிந்து போகாமை...
இப்படிப் பாடம் கற்பிக்கும் நிகழ்வுகளை
லிங்கன் வாழ்வில் இருந்து ஏராளம் எடுத்துச் சொல்லலாம்.