Saturday, September 9, 2023

நேர்காணல்.. பேராசிரியர் ராஜேஸ்வரி அவர்கள்..

கோவை நகரின் விமான நிலையம் அருகிலுள்ள புகழ்பெற்ற பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறையில் இருபத்தி நான்கு(24) ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர் பேராசிரியர் ராஜேஸ்வரி அவர்கள். 2005ம் ஆண்டு நவம்பரில் பேராசிரியர் ராஜேஸ்வரி அவர்கள் நடத்தும் மேன்ஷனில் குடிவந்த பிறகு இலக்கியம், வரலாறு, சமூகம், சினிமா குறித்து நிறைய பேசி விவாதம் செய்தமையால் வலைப்பூவிற்கு கிராமங்களின் முன்னேற்றம் குறித்து பேச வேண்டும் என கேட்டபோது பத்து நிமிடங்கள் அருமையான நேர்காணலை பேசினார். 2012ம் ஆண்டு டிசம்பரில் பேராசிரியரின் இல்லத்தில் நேர்காணல் செய்தது. நான் பிறந்த ஊரில் எனது பக்கத்து வீட்டு பெரியப்பா நாராயணசாமி அவர்கள்.. பூ.சா.கோ கல்லூரியின் முதல்வராக பணிபுரியும் காலகட்டத்தில் ராஜேஸ்வரி அவர்கள் பேராசிரியராக பணியில் இணைந்த காலகட்டம் என்பதால்.. பிரபஞ்சத்தின் சக்தி இந்த நேர்காணலில் ஒரு பூமத்திய ரேகையில் இணைத்தது.


2013ம் ஆண்டு பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முனைவர் பட்டம் வாங்கியிருந்தார். ஆங்கிலத்தில் சிறப்பாக பேசும் பேராசிரியர் அவர்கள்.. தமிழில் சிறப்பாக பேசியது பிரமிக்கச் செய்தது. நேர்காணல் செய்யும்போது இலக்கியத் தமிழில் பேசுவதை முதல் முறையாக கேட்டது. துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணா அவதாரத்தின் தொடர்ச்சியாக திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து உதயமாகும் கல்கி அவதாரம் குறித்து ராமாயணம், மஹாபாரதம் கதைகளுடன் நிறைய பேசியதுண்டு. 

மதுபானம் எனும் அரக்கன்.. சமூகத்தின் இளைய தலைமுறைகளை கலாச்சாரம், பண்பாட்டு தளத்தில் அழித்துக் கொண்டு வரும் கொடுமையான சூழ்நிலை.. இவற்றினை வேருடன் களைந்தெறியும் அக்கினி வேள்வி..

பிறந்த மண்ணை இளைய தலைமுறையினர் அதிகம் விரும்ப வேண்டும் எனும் லட்சியமுடன் வலைப்பூ உருவாக்கம் என்ற இரண்டு முக்கியமான கேள்விகளை ராஜேஸ்வரி அவர்களிடம் கேட்டபோது.. அற்புதமான பதிலைச் சொல்லி பிரமிக்கச் செய்தார்.

Thursday, September 7, 2023

வாஞ்சி மணியாச்சி ரயில்வே ஸ்டேஷன்.. டைம் லூப் ஆக்ஸன் திரில்லர்..

வீரபாண்டிய கட்டபொம்மன் வீரமரணம் எய்த இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு 1999ம் ஆண்டு கோடை விடுமுறையில், மே மாதம்.. தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அருகிலுள்ள கொல்லங்கிணறு ஊரில் அமைந்த எனது குலதெய்வமான ஸ்ரீநாரணம்மாள் சமேத ஐயப்பசுவாமி கோவிலின் திருவிழாவிற்கு அப்பா, பாட்டி ஆதியம்மாள், அம்மாவுடன் வருகை தந்தபோது கம்மகுல மக்களில் நிறைய பேர் பஸ்ஸில் வந்தார்கள். சில குடும்ப மக்கள் அவர்களுடைய ஊரிலிருந்து கோவில்பட்டி நகரின் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து ரயிலேறி வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வந்து அங்கிருந்து ஆட்டோவிலோ, காரிலோ ஏறி வாடகை கொடுத்து அப்பாடா.. எனச் சொல்லி கொல்லங்கிணறு ஊருக்கு வந்ததை கண்டது. புதிய நூற்றாண்டு பிறந்து பத்து, இருபது ஆண்டுகள் கடந்துபோன பிறகு கோவில் திருவிழாவிற்கு கம்மகுல மக்கள் வந்த பிறகு கண்டால்.. நூற்றுக்கும் மேற்பட்ட கார்களை பார்க்க முடிகிறது. கோவை நகரில் 2009ம் ஆண்டு செப்டம்பரில் வாங்கிய டூவீலரிலே பயணமாக.. 2022ம் ஆண்டு ஜூன் 6 திங்களன்று நடந்த கோவில் திருவிழாவிற்கு நடுப்பகல் சூரிய வெளிச்சத்தில் கொல்லங்கிணறு ஊருக்கு விஜயமானது. 

ஒரு வருடம் முன்பாக, 2021ம் ஆண்டு.. விடுதலை வீரன் வாஞ்சிநாதனின் நினைவு தினமன்று வாஞ்சி மணியாச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு விஜயாமாகி குலதெய்வம் கோவிலுக்கும் செல்லலாம் என பயணத்திற்கு ஆயத்தமானபோது.. சொந்த வேலைகள் வந்து ஒரு வாரம் பின்பு செல்லலாம் என மனதை தேற்றி.. ஜூன் 28 திங்களன்று காலை வேளை வீட்டிலிருந்து டூவீலரில் கிளம்பி கோவில்பட்டி நகருக்கு வந்து குருமலை செல்லும் சாலை வழியே பயணமாக நடுப்பகல் சூரிய வெளிச்சத்தில் கொல்லங்கிணறு ஊருக்கு வந்த வேளை.. ஸ்ரீநாரணம்மாள் சமேத ஐயப்பசாமி கோவில் மூடியிருந்தது. வாசலில் இருந்தவாறே நாரணம்மாளை தரிசனம் செய்து, கோவிலுக்கு நேராக காட்டுப் பாதையில் செல்லும் சாலையில் வாஞ்சி மணியாச்சி ரயில்வே ஸ்டேஷனை நோக்கிச் செல்கையில்..   

வாஞ்சி மணியாச்சி 0.4 கிலோ மீட்டர் எனும் மைற்கல்லை கண்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு கோவிலுக்கு வந்தபோது டூவீலரில் வராததால்.. இந்த மைற்கல்லை பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை. மொபைலில் புகைப்படம் எடுத்தது. பின்னர் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வந்து பால்ய கால நண்பர்களை சந்தித்து பேசி மகிழ்ந்தது. ஒரு நாள் புரட்சியின் மூலம் பிரிட்டீஷ் அரசாங்கத்தை திடுக்கிடச் செய்த வாஞ்சிநாதனின் வீரமுடன், ஆன்மா வாழும் ரயில்வே ஸ்டேஷன் என்பதால்.. புவியீர்ப்பு விசைபோல மனதை காந்தமென ஈர்த்து ஸ்டேஷனில் மணிக்கணக்கில் அமர்ந்து வரலாற்றின் நிகழ்வுகளை பின்னோக்கி காணச் செய்து மனதில் நினைவாகச் சுழன்றது. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் டைம் லூப் ஆக்ஸன் திரில்லர் படமாக சிம்பு நடித்த "மாநாடு" படம் இந்த 2021ம் ஆண்டின் நவம்பர் 25 அன்று ரிலீசாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. மாநாடு படம் 2019ம் ஆண்டு அக்டோபர் 10 வியாழன்று தொடங்கி டைம் லூப் ஆக்ஸன் திரில்லராக ஓடி ஓடி மறுதினம் அக்டோபர் 11 வெள்ளியன்று சர்பிரைஸாக முடிகிறது. 

இவ்வேளை.. 2021ம் ஆண்டின் அக்டோபர் 10 ஞாயிறன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மெட்ராஸ் சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல் அணிகள் விளையாடிய ஐபிஎல் போட்டியில்.. அன்ரிச் நோர்ட்ஜெ(Anrich Nortje) வீசிய 0.4 ஓவரின் பந்தில் மெட்ராஸ் சூப்பர் கிங்ஸ் ஓபனிங் பேட்ஸ்மேன் பாப் டூ பிளெஸ்ஸிஸ்(Faf Du Plessis) கிளீன் போல்டாகி ஒரு ரன்னுடன் பெவிலியன் திரும்பினார். ஆக.. இந்த ஐபிஎல் போட்டியின் 0.4 ஓவரின் பந்து டைம் லூப்பாக வாஞ்சி மணியாச்சி 0.4 கி.மீ மைற்கல்லுடன் இணைந்ததை கண்டு பிரமிக்கச் செய்தது. 

குறிப்பு: வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையின் நினைவு தினமன்று (நவம்பர் 16) பிறந்தவர்.. டெல்லி கேபிடல் ஐபிஎல் அணி பாஸ்ட் பவுலர் அன்ரிச் நோர்ட்ஜெ.. 

ஓம் நமசிவாய..

Wednesday, September 6, 2023

கொல்லங்கிணறு நாரணம்மாள் கோவில் திருவிழா..

தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சி மணியாச்சி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 2.4 கிலோ மீட்டர் காட்டு வழிச் சாலை வழியாக பயணம் செய்து வந்தால் திருநெல்வேலி நகருக்குச் செல்லும் சாலையில் அமைந்த கொல்லங்கிணறு ஊரில் எனது குடும்பத்தின் குலதெய்வமான ஸ்ரீஐயப்பன் சமேத நாரணம்மாள் கோவில். கானப்பாடி கம்ம குலத்தினர் வழிபாடு செய்யும் குலதெய்வம் கோவில். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். இரண்டு தினங்கள் நடைபெறும் திருவிழாவில் பக்தர்களுக்கு மூன்று வேளை உணவு அன்னதானமாக அளிக்கப்படும். ஊரிலுள்ள பிற கம்மகுல மக்களும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு செய்வார்கள்.  

கடந்த ஆண்டு ஜூன் 6 திங்களன்று.. மாலை வேளை திருவிழா தொடங்கியது. ஊரிலிருந்து புறப்பட்டு எனது இரு சக்கர வாகனத்தில் பயணமாக கோவில்பட்டி நகருக்கு வந்து குருமலை சாலை வழியாக நடுப்பகல் சூரிய வெளிச்சத்தில் கொல்லங்கிணறு ஊருக்கு வந்து சேர்ந்தேன். வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் செல்லும் சாலையில் அமைந்த உறவினர் இல்லத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு கிணற்றில் குளித்துவிட்டு வந்து கோவிலுக்குச் சென்று ஸ்ரீஐயப்பன் சமேத நாரணம்மாள் தெய்வத்தை தரிசனம் செய்து பரவசமானது.   

எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்துகையில்.. புதிதாக கட்டப்பட்ட உறவினர் வீட்டின் சுவற்றில் தியானம் செய்யும் புத்தரின் சிற்பம் பிரமிக்கச் செய்தது. உறவினர்கள் பெங்களூரில் தொழில் செய்கின்றனர். எனது உறவினர் முதுமை வயதில் வீட்டிலேயே ஒய்வு எடுக்கிறார். 

இரவு வேளை தொடங்கி.. ஸ்ரீஐயப்பன் சமேத நாரணம்மாள் தெய்வத்தின் பூர்வீக வரலாற்றினை பேசும் வில்லுப்பாட்டு நிகழ்வுடன், திருவிழாவில் கலந்து கொண்ட பெண்களின் கும்மிப் பாட்டு நிகழ்வு, இவை இரண்டும் ஒன்றாக அமைந்து இதை பார்க்கும் கம்மகுல பக்தர்களை பரவசம் அடையச் செய்ததை கண்டு மகிழ்ந்தது. 

ஓம் நமசிவாய..