Saturday, September 9, 2023

நேர்காணல்.. பேராசிரியர் ராஜேஸ்வரி அவர்கள்..

கோவை நகரின் விமான நிலையம் அருகிலுள்ள புகழ்பெற்ற பூ.சா.கோ கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறையில் இருபத்தி நான்கு(24) ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர் பேராசிரியர் ராஜேஸ்வரி அவர்கள். 2005ம் ஆண்டு நவம்பரில் பேராசிரியர் ராஜேஸ்வரி அவர்கள் நடத்தும் மேன்ஷனில் குடிவந்த பிறகு இலக்கியம், வரலாறு, சமூகம், சினிமா குறித்து நிறைய பேசி விவாதம் செய்தமையால் வலைப்பூவிற்கு கிராமங்களின் முன்னேற்றம் குறித்து பேச வேண்டும் என கேட்டபோது பத்து நிமிடங்கள் அருமையான நேர்காணலை பேசினார். 2012ம் ஆண்டு டிசம்பரில் பேராசிரியரின் இல்லத்தில் நேர்காணல் செய்தது. நான் பிறந்த ஊரில் எனது பக்கத்து வீட்டு பெரியப்பா நாராயணசாமி அவர்கள்.. பூ.சா.கோ கல்லூரியின் முதல்வராக பணிபுரியும் காலகட்டத்தில் ராஜேஸ்வரி அவர்கள் பேராசிரியராக பணியில் இணைந்த காலகட்டம் என்பதால்.. பிரபஞ்சத்தின் சக்தி இந்த நேர்காணலில் ஒரு பூமத்திய ரேகையில் இணைத்தது.


2013ம் ஆண்டு பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முனைவர் பட்டம் வாங்கியிருந்தார். ஆங்கிலத்தில் சிறப்பாக பேசும் பேராசிரியர் அவர்கள்.. தமிழில் சிறப்பாக பேசியது பிரமிக்கச் செய்தது. நேர்காணல் செய்யும்போது இலக்கியத் தமிழில் பேசுவதை முதல் முறையாக கேட்டது. துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணா அவதாரத்தின் தொடர்ச்சியாக திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து உதயமாகும் கல்கி அவதாரம் குறித்து ராமாயணம், மஹாபாரதம் கதைகளுடன் நிறைய பேசியதுண்டு. 

மதுபானம் எனும் அரக்கன்.. சமூகத்தின் இளைய தலைமுறைகளை கலாச்சாரம், பண்பாட்டு தளத்தில் அழித்துக் கொண்டு வரும் கொடுமையான சூழ்நிலை.. இவற்றினை வேருடன் களைந்தெறியும் அக்கினி வேள்வி..

பிறந்த மண்ணை இளைய தலைமுறையினர் அதிகம் விரும்ப வேண்டும் எனும் லட்சியமுடன் வலைப்பூ உருவாக்கம் என்ற இரண்டு முக்கியமான கேள்விகளை ராஜேஸ்வரி அவர்களிடம் கேட்டபோது.. அற்புதமான பதிலைச் சொல்லி பிரமிக்கச் செய்தார்.

No comments:

Post a Comment