Thursday, September 7, 2023

வாஞ்சி மணியாச்சி ரயில்வே ஸ்டேஷன்.. டைம் லூப் ஆக்ஸன் திரில்லர்..

வீரபாண்டிய கட்டபொம்மன் வீரமரணம் எய்த இருநூறு ஆண்டுகளுக்குப் பிறகு 1999ம் ஆண்டு கோடை விடுமுறையில், மே மாதம்.. தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் அருகிலுள்ள கொல்லங்கிணறு ஊரில் அமைந்த எனது குலதெய்வமான ஸ்ரீநாரணம்மாள் சமேத ஐயப்பசுவாமி கோவிலின் திருவிழாவிற்கு அப்பா, பாட்டி ஆதியம்மாள், அம்மாவுடன் வருகை தந்தபோது கம்மகுல மக்களில் நிறைய பேர் பஸ்ஸில் வந்தார்கள். சில குடும்ப மக்கள் அவர்களுடைய ஊரிலிருந்து கோவில்பட்டி நகரின் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து ரயிலேறி வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வந்து அங்கிருந்து ஆட்டோவிலோ, காரிலோ ஏறி வாடகை கொடுத்து அப்பாடா.. எனச் சொல்லி கொல்லங்கிணறு ஊருக்கு வந்ததை கண்டது. புதிய நூற்றாண்டு பிறந்து பத்து, இருபது ஆண்டுகள் கடந்துபோன பிறகு கோவில் திருவிழாவிற்கு கம்மகுல மக்கள் வந்த பிறகு கண்டால்.. நூற்றுக்கும் மேற்பட்ட கார்களை பார்க்க முடிகிறது. கோவை நகரில் 2009ம் ஆண்டு செப்டம்பரில் வாங்கிய டூவீலரிலே பயணமாக.. 2022ம் ஆண்டு ஜூன் 6 திங்களன்று நடந்த கோவில் திருவிழாவிற்கு நடுப்பகல் சூரிய வெளிச்சத்தில் கொல்லங்கிணறு ஊருக்கு விஜயமானது. 

ஒரு வருடம் முன்பாக, 2021ம் ஆண்டு.. விடுதலை வீரன் வாஞ்சிநாதனின் நினைவு தினமன்று வாஞ்சி மணியாச்சி ரயில்வே ஸ்டேஷனுக்கு விஜயாமாகி குலதெய்வம் கோவிலுக்கும் செல்லலாம் என பயணத்திற்கு ஆயத்தமானபோது.. சொந்த வேலைகள் வந்து ஒரு வாரம் பின்பு செல்லலாம் என மனதை தேற்றி.. ஜூன் 28 திங்களன்று காலை வேளை வீட்டிலிருந்து டூவீலரில் கிளம்பி கோவில்பட்டி நகருக்கு வந்து குருமலை செல்லும் சாலை வழியே பயணமாக நடுப்பகல் சூரிய வெளிச்சத்தில் கொல்லங்கிணறு ஊருக்கு வந்த வேளை.. ஸ்ரீநாரணம்மாள் சமேத ஐயப்பசாமி கோவில் மூடியிருந்தது. வாசலில் இருந்தவாறே நாரணம்மாளை தரிசனம் செய்து, கோவிலுக்கு நேராக காட்டுப் பாதையில் செல்லும் சாலையில் வாஞ்சி மணியாச்சி ரயில்வே ஸ்டேஷனை நோக்கிச் செல்கையில்..   

வாஞ்சி மணியாச்சி 0.4 கிலோ மீட்டர் எனும் மைற்கல்லை கண்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு கோவிலுக்கு வந்தபோது டூவீலரில் வராததால்.. இந்த மைற்கல்லை பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை. மொபைலில் புகைப்படம் எடுத்தது. பின்னர் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் வந்து பால்ய கால நண்பர்களை சந்தித்து பேசி மகிழ்ந்தது. ஒரு நாள் புரட்சியின் மூலம் பிரிட்டீஷ் அரசாங்கத்தை திடுக்கிடச் செய்த வாஞ்சிநாதனின் வீரமுடன், ஆன்மா வாழும் ரயில்வே ஸ்டேஷன் என்பதால்.. புவியீர்ப்பு விசைபோல மனதை காந்தமென ஈர்த்து ஸ்டேஷனில் மணிக்கணக்கில் அமர்ந்து வரலாற்றின் நிகழ்வுகளை பின்னோக்கி காணச் செய்து மனதில் நினைவாகச் சுழன்றது. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் டைம் லூப் ஆக்ஸன் திரில்லர் படமாக சிம்பு நடித்த "மாநாடு" படம் இந்த 2021ம் ஆண்டின் நவம்பர் 25 அன்று ரிலீசாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. மாநாடு படம் 2019ம் ஆண்டு அக்டோபர் 10 வியாழன்று தொடங்கி டைம் லூப் ஆக்ஸன் திரில்லராக ஓடி ஓடி மறுதினம் அக்டோபர் 11 வெள்ளியன்று சர்பிரைஸாக முடிகிறது. 

இவ்வேளை.. 2021ம் ஆண்டின் அக்டோபர் 10 ஞாயிறன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மெட்ராஸ் சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல் அணிகள் விளையாடிய ஐபிஎல் போட்டியில்.. அன்ரிச் நோர்ட்ஜெ(Anrich Nortje) வீசிய 0.4 ஓவரின் பந்தில் மெட்ராஸ் சூப்பர் கிங்ஸ் ஓபனிங் பேட்ஸ்மேன் பாப் டூ பிளெஸ்ஸிஸ்(Faf Du Plessis) கிளீன் போல்டாகி ஒரு ரன்னுடன் பெவிலியன் திரும்பினார். ஆக.. இந்த ஐபிஎல் போட்டியின் 0.4 ஓவரின் பந்து டைம் லூப்பாக வாஞ்சி மணியாச்சி 0.4 கி.மீ மைற்கல்லுடன் இணைந்ததை கண்டு பிரமிக்கச் செய்தது. 

குறிப்பு: வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரையின் நினைவு தினமன்று (நவம்பர் 16) பிறந்தவர்.. டெல்லி கேபிடல் ஐபிஎல் அணி பாஸ்ட் பவுலர் அன்ரிச் நோர்ட்ஜெ.. 

ஓம் நமசிவாய..

No comments:

Post a Comment