Wednesday, September 6, 2023

கொல்லங்கிணறு நாரணம்மாள் கோவில் திருவிழா..

தூத்துக்குடி மாவட்டம், வாஞ்சி மணியாச்சி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 2.4 கிலோ மீட்டர் காட்டு வழிச் சாலை வழியாக பயணம் செய்து வந்தால் திருநெல்வேலி நகருக்குச் செல்லும் சாலையில் அமைந்த கொல்லங்கிணறு ஊரில் எனது குடும்பத்தின் குலதெய்வமான ஸ்ரீஐயப்பன் சமேத நாரணம்மாள் கோவில். கானப்பாடி கம்ம குலத்தினர் வழிபாடு செய்யும் குலதெய்வம் கோவில். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில் திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். இரண்டு தினங்கள் நடைபெறும் திருவிழாவில் பக்தர்களுக்கு மூன்று வேளை உணவு அன்னதானமாக அளிக்கப்படும். ஊரிலுள்ள பிற கம்மகுல மக்களும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பு செய்வார்கள்.  

கடந்த ஆண்டு ஜூன் 6 திங்களன்று.. மாலை வேளை திருவிழா தொடங்கியது. ஊரிலிருந்து புறப்பட்டு எனது இரு சக்கர வாகனத்தில் பயணமாக கோவில்பட்டி நகருக்கு வந்து குருமலை சாலை வழியாக நடுப்பகல் சூரிய வெளிச்சத்தில் கொல்லங்கிணறு ஊருக்கு வந்து சேர்ந்தேன். வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் செல்லும் சாலையில் அமைந்த உறவினர் இல்லத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு கிணற்றில் குளித்துவிட்டு வந்து கோவிலுக்குச் சென்று ஸ்ரீஐயப்பன் சமேத நாரணம்மாள் தெய்வத்தை தரிசனம் செய்து பரவசமானது.   

எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்துகையில்.. புதிதாக கட்டப்பட்ட உறவினர் வீட்டின் சுவற்றில் தியானம் செய்யும் புத்தரின் சிற்பம் பிரமிக்கச் செய்தது. உறவினர்கள் பெங்களூரில் தொழில் செய்கின்றனர். எனது உறவினர் முதுமை வயதில் வீட்டிலேயே ஒய்வு எடுக்கிறார். 

இரவு வேளை தொடங்கி.. ஸ்ரீஐயப்பன் சமேத நாரணம்மாள் தெய்வத்தின் பூர்வீக வரலாற்றினை பேசும் வில்லுப்பாட்டு நிகழ்வுடன், திருவிழாவில் கலந்து கொண்ட பெண்களின் கும்மிப் பாட்டு நிகழ்வு, இவை இரண்டும் ஒன்றாக அமைந்து இதை பார்க்கும் கம்மகுல பக்தர்களை பரவசம் அடையச் செய்ததை கண்டு மகிழ்ந்தது. 

ஓம் நமசிவாய..

No comments:

Post a Comment