Wednesday, March 19, 2014

மார்ச் 20 - சர்வதேச சிட்டுக்குருவிகள் தினம்

ஸ்ஸ்ஸ்...அப்பாடா! என்ன வெயில்!! மனுசன் நடக்கவே முடியல...!
கொஞ்சம் தண்ணீர் கொடுங்க...!

இப்படிக் கூறாத மனிதர்கள் இல்லை.
ஆம்..வெயிலின் கடுமை
அனைவரையும் வாட்டுகிறது...


நமக்கெல்லாம் தண்ணீர் தர நமது சொந்தங்கள், நண்பர்கள் என பலர் உள்ளனர். தண்ணீர் இருக்கும் இடம் தேடி அலையவோ, ஏன்.. காசு கொடுத்துக் கூட தாகம் தணிக்க நம்மால் முடியும்.

ஆனால்...எண்ணற்ற காகம், குருவி, கிளி போன்ற பறவைகள் இந்தக் கோடையின் வெப்பம் தாங்காமல் தண்ணீரைத் தேடி அலைந்து கொண்டு இருக்கின்றன. அவற்றின் தாகத்தினைத் தீர்க்க நாமும் உதவலாமே...

எப்படி..?

தாகத்துக்காக தண்ணீரைத் தேடி அலையும் பறவைகள் தண்ணீர் கிடைக்காமல் மடிந்து போய்விடும் கொடுமைகள் நடப்பதைத் தடுக்கும் விதமாக நாம், நமது வீட்டின் கூரை மீது, மொட்டை மாடியின் மீது சிறு சிறு குவளைகளில் நிழலான இடத்தில் தண்ணீர் வைத்து பறவைகளின் தாகம் தீர்த்து அவற்றைக் காப்போம். இந்தப் புனித பணியினை இந்தக் கணமே செய்வோமா!!...

இந்தப் புனித பணியில் நீங்களும் பங்குகொள்ள, உங்களால் முடிந்த அளவு இந்தப் பக்கத்தை பிரதி எடுத்து உங்கள் பகுதியில் விநியோகித்து, பறவைகளின் தாகம் தீர்க்க மற்றவர்களை உதவச் செய்யலாமே...
மேலும் இந்தப் பக்கத்தை உங்களுடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளுமாறும் அன்புடன் வேண்டுகிறேன்...!  

No comments:

Post a Comment