Friday, August 2, 2013

உறுதியான மனம்!

கென்யாவில் கிமானி மருகே என்னும் பெயரைக் கொண்ட
90 வயது தாத்தாவைத் தெரியாத ஆளே இல்லை...
என்று கூறிவிடலாம்.அந்த அளவிற்கு புகழ்பெற்றவர்.

கல்வி கற்க வேண்டுமென்ற தீராத வேட்கை கொண்ட
இவரின் படிப்பு ஆசைக்கு குடும்ப வறுமை
தடைக் கல்லாக நின்று விட்டது.
2003 ம் ஆண்டு அந்நாட்டு அரசு ஆரம்பக் கல்வியை
இலவசமாக்கியது.

இது தான் வாய்ப்பு என்று கருதிய தாத்தா
பேனா,புத்தகத்துடன் பள்ளிக்கு நடையைக் கட்டிவிட்டார்.
அப்போது அவருக்கு வயது 84.

உலகிலேயே மிக வயதான மாணவர் என்று
இவரை ஊடகங்கள் கொண்டாடுகின்றன.
(தினமணி,மதுரை - 30.08.2009)

ராய்ட்டர் நிறுவனம்,ஏன் இந்த வயதில் புத்தகம்-நோட்டெல்லாம் ..?
என்று தொடுத்த கேள்விக்கு
தாத்தா இப்படி பதில் சொல்கிறார்!

பைபிளை நானாகப் படித்துப் பார்க்க வேண்டும்
என ஆசை எனக்கு இருந்தது.அதுதான் ஸ்கூலில்
சேர்ந்திருக்கிறேன் என்கிறார் உறுதியோடு!!

No comments:

Post a Comment