Friday, August 2, 2013

பெருமை தேடித்தந்த உறுதி!

ஐயோ..எரியுதே..காப்பாற்றுங்களேன்!"
இப்படி கதறலோடு முடிந்துபோன விபத்தில் கருகிப்போன 
பெற்றோரின் மகள் அபிராமி.

சின்னஞ் சிறிய குழந்தையை இப்படி அனாதையாக 
நிறுத்திட்டேயே ஆண்டவா..!என இரக்கம் சொட்டப் 
பார்த்த பார்வைகளுக்கு மத்தியில்...

சிவசாமி - பிரியா எனும் அபிராமியின் மாமா - அத்தை 
வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

என்னைக் கைவிட்டுவிடாமல் - தவிக்க விடாமல் 
வளர்த்து வரும் அத்தை மாமாவுக்கு பெருமை தேடித் 
தருவேன் என்று உறுதி எடுத்தார் அபிராமி.
அதை நிறைவேற்றியும் விட்டால் அபிராமி!

சென்னை விருகம்பாக்கம் ஜெய் கோபால் கரோடியா 
அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியான அபிராமி 
10 ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?
488/500 (மகளிர் முரசு,ஜூன் 2010)

அபிராமியை அவரது தோழிகள் குறிப்பிடுகிறார்களாம் 
நம்பிக்கைத் தூண் என்று!!

No comments:

Post a Comment