Monday, December 8, 2014

கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள சுசீந்திரம் கோயிலுக்கு சென்றபோது - 25.04.14

கன்னியாகுமரிக்கு செல்லும் வழியிலுள்ள சுசீந்திரம் கோயில் உலகப் புகழ் பெற்றது. இலங்காபுரி அரசன் ராவணனின் சகோதரன் விபீசணன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. தென்னிந்தியாவின் சிவலாய வழிபாட்டு  தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. சிறு வயதில் கிராமத்திலிருந்து சுற்றுலா சென்றபோது பலமுறை வந்ததுண்டு. அன்று போல் இன்றும் தன்னுடைய ஆன்மீகத் தன்மை குறையாமல் கம்பீரமாக காட்சியளிக்கிறது. 

இந்தக் கோயிலுனுள் தாணுமலையான் சுவாமி அருள் புரிகிறார். இந்தக் கோயிலுள்ள அனுமன் சிலை 2000 வருடங்களுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிக்க கோவையிலிரு ந்து கிராமத்திற்கு வந்தபோது, சுசீந்திரம் கோயிலுக்கு வழிபட வந்தேன். 




கோயிலுக்கு பக்கத்தில் உள்ள தெப்பக்குளம்..

















நான் தெப்பக்குளத்தில் அமர்ந்திருந்தபோது வெப்பமாக இருந்ததால், தண்ணீரில் வெப்பத்தைக் குறைக்க ஒரு அழகான நாய் வந்தது. பத்து நிமிடம் என் அருகிலேயே இருந்தது. அந்நிய ஆள் என்று நினைக்காமல் அன்போடு பழகியது, என்னை வியக்க வைத்தது.


கோயிலுக்கு அருகே பிச்சை எடுக்கும் முதியவர். இந்தியாவின் குடிமக்களில் இவரும் ஒரு அங்கம். இந்த பகுதியில் செல்வந்தராக இருந்தவர் என்று சிலர் சொன்னார்கள். ஒரு விபத்தில் குடும்பத்தை பறிகொடுத்த பிறகு மனநோயாளி ஆகி, இந்த அவல நிலைக்கு வந்ததாக அங்கெ இருந்தவர்கள் சொன்னார்கள்.

காலம்தான் மனிதர்களை எந்த அளவுக்கு தலையெழுத்தை மாற்றுகிறது. இதைத்தான் காலமிட்ட கோலம் என்கிறார்கள்..!


கோயிலின் தேர்..!




தெப்பக்குளத்திற்கு குளிக்கச் செல்லும் வழி. சிறு வயதில் என்னுடைய தந்தையாருடன் பலமுறை இந்தக் குளத்தில் நீராடி இருக்கிறேன். இன்றைய தினம் நீராடியபோது, தந்தையாருடன் குளித்த அனுபவம் பசுமையாக நினைவுக்கு வந்தது.

























No comments:

Post a Comment