Tuesday, September 8, 2015

குமணன்

கொங்கு மண்டலத்தின் முதிரம் என்னும் ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவன் குமணன். (இன்றைய பழனி மலை வட்டம் அருகே உள்ள குதிரை மலை). இல்லை என்று வருவோர்க்கு எல்லாமும் கொடுத்த வள்ளல்.

அண்ணன், தான தருமம் செய்து நற்பெயர் வாங்கியது குமணனின் தம்பி
இளங்ககுமணனுக்குப் பிடிக்கவில்லை. பொறாமை நெஞ்சில் தீயாகத் தகிக்க, அண்ணணனைக் காட்டிற்கு விரட்டி விட்டு நாட்டைப் பிடுத்துக் கொண்டான். காட்டில் குமணன் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தான். புலவர்கள் எல்லாரும்
ஈதல் யாருமின்றி மிகவும் வறுமையில் வாடினர்.

பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் வறுமையைத் தாங்க முடியமால் காட்டில் குமணனைத் தேடி அலைந்தார்.

குமணனும் துன்பத்தில்தானே காட்டில் திரிகிறான். அவனால் புலவருக்கு என்ன தரமுடியும்? இருந்தாலும் தன்னைப் பாடிய புலவரை வெறுங்கையுடன் அனுப்ப மனமின்றித் தனது வாளைக் கொடுத்து, தனது தலையைக் கொய்து கொண்டுபோய் இளங்குமணனிடம் கொடுத்தால் பரிசு தருவான், வாங்கி பசியாறுங்கள் என்கிறான் குமணன்.

ஆனால் புலவர் குமணனின் வாளை மட்டும் வாங்கிக்கொண்டு இளங்குமணனிடம் 
கொண்டு போய்க் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின் இரு குமணன்களும் என்னவானார்கள் என்று தெரியவில்லை.

நாடகம் ஒன்றில் மட்டும்,

குமணனிடம் வாளை வாங்கிய புலவர், வாழை மரத்தின் அடிவேரில் தலைபோல் செய்துகொண்டு போய்க் காட்டியதாகவும், அது கண்டு இளங்குமணன் துணுக்குற்று மனம் திருந்தி அழுததாகவும் பிறகு புலவர் உண்மையை உரைக்கக் காட்டில் திரிந்த குமணனை மீண்டும் அழைத்து வந்து நாட்டுக்கு அரசனாக்கினான் என்றும் கூறுகிறது.

No comments:

Post a Comment