Tuesday, September 8, 2015

ஆதன் ஓரி

நெடுமான் அஞ்சியின் நண்பனாக விளங்கியவன் ஆதன் ஓரி. இவனும் கடையேழு வள்ளல்களில் ஒருவன். ஓரி என்னும் குதிரை மீது பயணம் போனதால் ஓரி என்றே அழைக்கப்பட்டான். யானைகளைப் புலவர்களுக்குப் பரிசாக வழங்கியவன். புலவர்கள் அந்த யானைகளை விற்றுப் பொருள் பெற்றார்கள். வேட்டையாடக் காட்டு வழியே சென்றபோது பாட்டுப் பாடிப் பரிசில் பெரும் பாணர் ஒருவர் காட்டில் இவனைப் பார்த்ததும் யாழ் எடுத்து இசைக்க,அதை கேட்ட ஓரி தன் மேனியில் அணிந்திருந்த அணிகலன்களை அப்பாணருக்கு கொடுத்தான்.

சேரனுடன் கூட்டு சேர்ந்து அதியமானைக் கொன்ற திருமுடிக்காரி, ஆதன் ஓரியை முதலில் கொன்று விட்டுத்தான் அதியமானிடம் சண்டைக்குப் போனான். புலவர்களுக்குப் பொன், பொருள், தேர், யானைகளைப் பரிசாகக் கொடுத்தவன். 
காரி மீது அன்பு கொண்ட கபிலர் என்னும் புலவர் ஒரியைப் பழித்துத் தூற்றினார்.

No comments:

Post a Comment