Sunday, June 15, 2014

நோபல் பரிசைப் பெற்றதால் எழுத முடியாமல் போன எகிப்து எழுத்தாளர்

எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் நாகூப் மாபொஷ் (1911-2006). அரேபிய முறையில் இவரது படைப்புகள் வெளிவந்து பிரசித்தி பெற்றன. மனிதர்கள் அனைவராலும் நேசிக்கப்படும் அளவிற்கு இவரது படைப்புகளில் உண்மை, ஆழ்ந்த சிந்தனை ஆகியவற்றைக் காணலாம். இருந்தபோதிலும் இவரது படைப்புகள் மதத்தை நிந்தனை செய்வதாக, இஸ்லாமியத் தீவிரவாதிகள் குற்றம் சாட்டி அவ்வப்போது கண்டனக் குரல்களை எழுப்பி வந்தனர்.இந்நிலை யில் நாகூப்பின் இலக்கியத் தொண்டினைப் பாராட்டி 1988 ம் ஆண்டிற்கான இலக்கியத் துறை நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.

நோபல் பரிசை அவர் பெற்றதைக் கண்டித்து தீவிரவாதிகள் அவரை கத்தியால் குத்திக் கொள்ள முயற்சி செய்தனர். அதிலிருந்து அவர் எப்படியோ தப்பிப் பிழைத்து விட்டார். இருப்பினும் இந்தத் தாக்குதலில் அவரது வலது கை நரம்பு துண்டிக்கப்பட்டது. அவர் அதைத் தொடர்ந்து எழுத முடியாத நிலை ஏற்பட்டது. பின் 2006 ம் ஆண்டில் தனது 94 வயதில் காலமானார்..!!

No comments:

Post a Comment