Sunday, August 6, 2023

ஸ்ரீநரசிம்மா அவதாரம் - பேரூர் பட்டீஸ்வரர் கோவில்

கோவை புறநகரின் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த பேரூர் பச்சைநாயகி அம்மன் சமேத பட்டீஸ்வரர் கோவில். இந்தக் கோவிலின் பச்சைநாயகி அம்மன் சந்நிதி வலது புறமாக கஞ்சி வரதராஜ பெருமாள் அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் வரதராஜ பெருமாளின் ஆன்மீகப் பேராற்றலை இங்கு அருள்புரியும் வரதராஜ பெருமாளிடம் தரிசனம் செய்கையில் பெறுவதை அகத்தில் உணர முடியும். தீமைகளை அழித்து தர்மத்தை நிலைநாட்ட யுகங்கள் தோறும் அவதரிக்கின்ற அவதார புருஷன். வரதராஜ பெருமாளின் சந்நிதி முன்பாக ஸ்ரீமந் நாராயணனின் பத்து அவதாரங்களை குறிக்கும் வண்ண ஓவிய படங்கள் கண்ணாடி பேழைகளில் வைக்கப்பட்டு இதைக் காணும் பக்தர்களை பரவசம் கொள்ளச் செய்கிறது. மினர்வா கிளாஸ் ஹவுஸ் எனும் கடை வைத்துள்ள ஸ்ரீமந் நாராயணின் பக்தர் இந்த ஓவிய படங்களை செய்து கோவிலுக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளதை கண்ணாடி பேழையில் பார்க்க முடிகிறது. 

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நூறாவது தடைவையாக பேரூர் பட்டீஸ்வரரை தரிசனம் செய்ய வருகையில்.. காஞ்சி வரதராஜ பெருமாளின் முன்பு ஓவியத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீநரசிம்மா அவதாரம், கோவை நகரின் அவிநாசி சாலையிலுள்ள ஸ்ரீவரதராஜ மில்ஸின் எதிர்புறமுள்ள சக்தி கிளாஸ் அன்ட் பிளைவுட்ஸ் கடையின் முன்புறமுள்ள மேம்பால தூணுடன் தொப்புள் கொடி உறவாக இணைத்துள்ளதை கண்டு பிரமிப்பூட்டியது. ஆக, ஸ்ரீநரசிம்மா அவதாரம் இந்த ஆண்டின் ஜூன் 03, ஜூன் 04 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவதார மூர்த்தியாக தூணை பிளந்து கொண்டு அவதரித்து அசுர குணம் படைத்த ஹிரண்யகசிபுவின் குடலை உருவி தனது புஜத்தில் மாலையாக போட்டுக் கொண்டு ஏழு கண்டங்களும் குலுங்கும்படியாக சிம்ம கர்ஜணை புரிந்ததை அகத்தில் காண முடிந்தது. 

ஓம் நமோ நாராயணா.. ஓம் நமோ நாராயணா..

No comments:

Post a Comment