Wednesday, August 9, 2023

பொன்னியின் செல்வன் - இயக்குநர் மணிரத்னம்

"பொன்னியின் செல்வன்" எனும் வரலாற்றுப் புதினத்தை எழுதிய எழுத்தாளர் கல்யாண கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தனது பெயரை சுருக்கி கல்கி என வைத்துக் கொண்டார். ஸ்ரீமந் நாராயணின் பத்தாவது அவதாரம் எனச் சொல்லப்படும் "கல்கி அவதாரம்" பெயரினை திருமாலின் மீது கொண்ட பக்தியின் காரணமாக கல்கி என்ற புனை பெயருடன் கல்கி இதழில் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தை எழுதியதால் லட்சோப லட்சம் வாசகர்கள் கல்கி எனும் பெயரினை மந்திரச் சொல்லாக இன்று வரையிலும் பேசிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. 

இந்திய திரையுலகின் நட்சத்திர இயக்குநர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படம் ஏப்ரல் 28ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீசாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடியது. மாவீரன் நெப்போலியனின் நினைவு தினமான மே 5ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று.. கோவை புறநகரிலுள்ள காமாட்சிபுரம் ஊரில் அமைந்த SRK Miraj எஸ்.ஆர்.கே மிராஜ் சினிமாஸில் நண்பகல் காட்சிக்குச் சென்று பார்த்தது. படத்தின் சென்ஸார் தேதி ஏப்ரல் 11 என்பதைக் கண்டது.

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படம், முதல் பாகத்தைவிட கலைநயமுடன் சிறப்பாக இருந்தது. முதல் பாகத்தில் ரஹ்மானின் மியூசிக் எங்கே கேட்கிறது என்று தேடியதுபோல இல்லாமல், இரண்டாம் பாகம் படத்தில் முழுமையான இசையை கேட்க முடிந்தது ஒரு ஆறுதல் என மட்டுமே சொல்லலாம். தெலுங்கு மொழியில் உருவாகி பல மொழிகளில் வெற்றிகரமாக ஓடிய பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி ஐயாபோல.. ரஹ்மான் இசையமைத்தார் என்று ஒப்புக் கொள்ள முடியாது. பாகுபலி படத்தின் மிகப்பெரிய பலமே பிரமிக்க வைக்கும் இசையமைப்பு என்பதை சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேசியதை கேட்டதுண்டு.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாட்ஷா படத்தின் வெள்ளி விழா நடந்த ஜூலை 14 அன்று, காமிக்ஸ் படம் வரையும் அம்புலிமாமா பையனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுவதை இயக்குநர் ஷங்கர்.. சங்கர் சிறந்த பொழுதுபோக்கு படம் என படம் பார்த்து பாராட்டிய பிறகு அறிய முடிந்தது. படத்தின் சென்ஷார் தேதி ஜூலை 10. இந்த ஜூலை 10 அன்று பம்பர் படத்தை கோவை சித்ரா விமான நிலையம் அருகிலுள்ள பிராட்வே சினிமாஸில் இரவுக் காட்சி பார்த்தபோது.. சென்ஷார் தேதி ஏப்ரல் 11 செவ்வாய்கிழமையாக இருந்ததை கண்டது. 

2023ம் ஆண்டில் ஏப்ரல் 11, ஜூலை 11 இரண்டு தினங்கள் மட்டுமே செவ்வாய்கிழமை. ஜூலை 11.. பிரிட்டீஷாரின் ஏஜெண்டான மருதநாயகம் படைகளை தீரமுடன் எதிர்த்துப் போராடிய மாவீரன் அழகுமுத்துகோனின் பிறந்த தினம். ஜூலை 18.. செவ்வாய்கிழமை, மாவீரன் அழகுமுத்துகோனின் நினைவு தினம். இப்படியாக, மாவீரன் அழகுமுத்துகோனின் நினைவு தினமன்று கேரளா மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி அவர்கள் சிவபதவி அடைந்ததை கண்டது. 

கேரளா மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற சபரிமலை கோவிலில் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய சென்ற தமிழ்நாட்டு இளைஞன் ஒருவன் இஸ்லாமிய பெரியவரிடம் வாங்கிய ஒரு லாட்டரியில் கோடி பணம் பம்பர் பரிசாக விழுவதை மையமாக கொண்டது பம்பர் படம். ஆக, பொன்னியின் செல்வன் 2ம் பாகமும், பம்பர் படமும் தொப்புள்கொடி உறவுபோல இணைந்த கைகளாக இருப்பதைக் கண்டு பிரமிப்பூட்டியது.

No comments:

Post a Comment