Saturday, August 5, 2023

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் - ஸ்ரீநரசிம்மா அவதாரம் - மார்ச் 10 - வெள்ளிக்கிழமை

கோவை புறநகரின் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள பேரூர் பச்சைநாயகி அம்மன் சமேத பட்டீஸ்வரர் கோவில் "மேலைச் சிதம்பரம்" என பக்தர்களால் அழைக்கப்படும் அகில இந்திய அளவில் புகழ் பெற்ற கோவிலாகும். மகாத்மா காந்தி, ஜெயபிரகாஷ் நாராயணன், காமராஜர் போன்ற அரசியல் பெருந்தலைவர்களின் அஸ்தி வைத்து கட்டப்பட்ட கல்லறை நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் எந்த அளவிற்குச் சிறப்பு வாய்ந்தது என்பதை நமக்குச் சொல்கிறது. 

இந்த ஆண்டின் மார்ச் 10, வெள்ளிக்கிழமை.. மாலை வேளை.. ஆர்ப்பரிக்கும் அட்லாண்டிக் கடலுக்குள் புதைந்துபோன அல்கொய்தா இயக்கத் தலைவன் ஒஸாமா பின்லேடனின் பிறந்த தினம்.  கோவை நகர்மண்டபம் பஸ் நிலையமிருந்து பேரூர் செல்லும் பஸ்ஸில் ஏறியபோது நண்பர் ரவிகாந்தனும் ஏறிய பின்பு இவரைக் காண ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்த மகிழ்ச்சி உண்டானது. முத்துவீரப்பன் எனும் கேரக்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த வீரா படத்தில் நகைச்சுவை நடிகர் செந்திலின் பெயர் ரவிகாந்தன் என்பதை நண்பரிடம் ஞாபகப்படுத்தி சொன்னபோது.. ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனர் போல.. நரன், நரேன் எனும் நரநாராயணர்கள் எனபதுபோல, நம்முடைய நட்பு காலம் கடந்தும் உயிருள்ளதாக இருப்பதைச் சொல்லி பேசிக் கொண்டது. 

சூப்பர் ஸ்டார் ரஜினி போலவே முகத்தோற்றம், அவரைப் போன்று கருப்பு நிறம் முகமுடன் காட்சி தரும் சூர்யகாந்தனை "ரவிகாந்தன்" என்றே அழைப்பேன். சத்தியமங்கலம் ஊரிலுள்ள ஸ்ரீபாரியூர் அம்மன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிலரங்கு நடத்துவதற்கு ஒன்றாகச் சென்ற நாட்களின் நினைவுகளை நண்பர் ரவிகாந்தனிடம் சொன்னபோது.. கே.பாலச்சந்தர் இயக்கிய "உன்னால் முடியும் தம்பி" படம் ரிலீசான 1988ம் ஆண்டில் ஆகஸ்டு 12, பிப்ரவரி 12 இரண்டு நாட்களுமே வெள்ளிக்கிழமை என்பதுபோல..  

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்ரீபாரியூர் அம்மன் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற பிப்ரவரி 12 புதன்கிழமை என்பதுடன், இந்த ஆண்டின் பிப்ரவரி 12 ஞாயிறாக அமைந்து மகாகவி பாரதி எழுதிய புதிய ஆத்திச்சூடிபோல "ஞாயிறு போற்று" என்பதாக அமைந்ததை சொல்ல.. மகிழ்ச்சி என்றார். 

நண்பர் சூரியகாந்தன் எனும் ரவிகாந்தன் செல்வபுரத்தில் இறங்கி கொண்டார். பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு விஜயமான வேளை.. நுழைவாயிலில் நந்தி அருகிலுள்ள வலதுபுறம் தூணில் ஹிரண்யகசிபுவை வதம் செய்யும் நரசிம்மா அவதார சிற்பத்தினை நூறாவது தடவையாக பார்க்கும் பாக்கியம் அமைந்து.. ஹிரண்யகசிபுவின் மகன் பக்த பிரகலாதனை போன்று "ஓம்.. நமோ நாராயணா" என்ற மந்திரத்தை முப்பது முறை சொல்லி மகிழ்ந்தது. 

🐅ஓம்.. நமோ நாராயணா.. ஓம்.. நமோ நாராயணா..

No comments:

Post a Comment