Tuesday, August 15, 2023

கோரக்கர் சித்தர் - கனகசபை

கோவை நகரிலிருந்து நகர்மண்டபம் வழியாக சிறுவாணி செல்லும் சாலையில் அமைந்த பேரூரில் பச்சைநாயகி அம்மன் சமேத பட்டீஸ்வரர் கோவில் பரமேஸ்வரனை தரிசனம் செய்யும் லட்சோப லட்சம் பக்தர்களை தன்னிடம் ஈர்த்து புகழ்பெற்ற சிவாலயமாக திகழ்கிறது. கோவிலுக்குச் செல்லும் நுழைவாயிலின் வலது புறமாக சிற்பக் கலையின் சிகரமாக திகழும் கனக சபையில் சிவகாமி சுந்தரி அம்மன் சமேத நடராஜர் சந்நிதி ஆன்மீகப் பேராற்றலின் மையமாக இருப்பதால் மேலைச் சிதம்பரம் என ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பக்தர்களால் அழைக்கப்பட்டு, சிதம்பரம் கோவிலில் வீற்றிருக்கும் நடராஜரை தரிசனம் செய்யும் பாக்கியத்தை பக்தர்களுக்கு தருவதை அகத்தில் காண முடிகிறது.


கனக சபையில் பன்றியுடன் பறக்கும் சித்தராக காட்சி தரும் கோரக்கர் சித்தரின் சிற்பத்தை தூணில் காணலாம். பச்சைநாயகி அம்மன் சந்நிதி பின்புறமாக முருகப்பெருமானின் சோமஸ்கந்த மூர்த்தியை பிரதிஷ்டை செய்த பெருமை கோரக்கர் சித்தருக்கு அமைகிறது. இங்கு கோரக்கர் தவம் செய்த இடத்தில் பீடம் அமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து பெரும் தவப்பயனை அடைகின்றனர்.   

ஓம் நமசிவாய..

No comments:

Post a Comment