இயற்கை வளத்தோடு கூடிய பசுமையான இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா உலகையே வெல்ல வேண்டும் என்ற சுவாமி விவேகானந்தரின் கனவை நனவாக்குவோம். பாரதமே விழித்தெழு, உலகை ஒளியூட்டச் செய்..
Monday, July 24, 2023
கோவை புத்தக கண்காட்சி - ஜூலை 21
Tuesday, January 17, 2023
குற்றாலம் ஐந்தருவி..
குற்றாலம் ஊரில் ஐந்தருவி அருகிலுள்ள வன உயிரியியல் பூங்காவிற்கு அன்புச் சகோதரி ராஜேஸ்வரி தனது பிறந்த தினமன்று விஜயமாகி எடுத்த புகைப்படத்தை எனது இ-மெயிலுக்கு அனுப்பினார். தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை ஊரிலுள்ள வேறு வேறு பள்ளியில் நாங்கள் இருவரும் படிக்கையில் பிறந்த வருடம் 1983ம் ஆண்டு என்பதை சொல்லியுள்ளார். குளக்கட்டாக்குறிச்சி ஊரைப் பற்றிய வலைப்பூ உருவாக்கியபோது நிறைய புகைப்படங்களை இ-மெயிலுக்கு அனுப்பி உதவினார்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய டெர்மினேட்டர் படத்தில்.. நள்ளிரவில் வானத்தில் வெட்டிய ஒரு மின்னலில் கைல்ரீஸ் பிறந்து இன்றைக்கு என்ன தேதி, வருடம், கிழமை என்ன என்பதை ஒருவரிடம் கேட்கையில் மே 12, வியாழக்கிழமை என்பதை மட்டுமே பேசுகையில்.. எந்த ஆண்டு என்பதை கேட்பதற்குள் துப்பாக்கியுடன் ஓட்டம் பிடிப்பார். இந்தக் காட்சியை படத்தில் பார்க்கையில் மெய் சிலிர்க்க வைக்கும். தங்கை ராஜேஸ்வரியின் புகைப்படத்தை பார்த்த பின்பு.. ராஜேஸ்வரி பிறந்த 1983ம் ஆண்டின் தினத்திலே டெர்மினேட்டர் படத்தில் கைல்ரீஸ் பிறப்பதைக் கண்டு பிரமிப்பூட்டியது.
உலகை அழிக்கப் பிறந்த ஒரு பயங்கரமான எந்திரம் பிறந்த பிறகு இந்த எந்திரமிடமிருந்து உலகை காப்பாற்ற ஒரு மகனை பெற்றெடுக்க கைல்ரீஸ் பிறப்பார். இதுவே டெர்மினேட்டர் படத்தின் மிகச் சிறந்த தொடக்கமாகும்.
ஓம் நமசிவாய..
Wednesday, June 29, 2016
ஜோக்கர்
பிரைட் செருப்பு வாங்கி ஏழெட்டு மாசம் இருக்கும். இதைக் கால்ல போட்டுகிட்டு போகாத இடமில்லை. இப்ப பசங்க போடுற மாதிரி கூலர்ஸ் செப்பல், காலை பெல்டு மாதிரி மூடுற செப்பலெல்லாம் போட விரும்புறதில்லை. பிரைட் போட்டு நடக்குறதுக்கும் எளிமையாவும் இருந்தது.
ஒரு நாள் தீடீர்னு பெருவிரல் பக்கத்துல இருக்குற கயிறு அறுந்துருச்சி. நல்ல வேளையா செருப்புத் தைக்கிறவரு பக்கத்துல கடை போட்டு உக்காந்து இருந்தாரு. தைக்க கூலியா 20 ரூபாய் சொன்னாரு. அஞ்சு நிமிஷத்துல தச்சிக் கொடுத்துட்டாரு.
உங்களுக்கு ஒரு மாசம் எவ்வளவு வருமானம் வருதுன்னு கேட்டேன். மூணு நேரம் சாப்பாடுபோக தினமும் கையில 700 ரூபா நிக்குமுன்னு சொன்னாரு..
இவரை சொன்னப்ப என்ன ஆச்சரியமுன்னா, இலட்சக்கணக்குல பணம் கட்டி படிச்சி வர்ற இன்ஜீனியரிங் இளைஞர்கள் வேலை செய்யுறப்ப சாப்பாடுபோக மாசம் கையில 1500 ரூபா நிக்குது. கலை அறிவியல் கல்லூரியில வேலை செய்யுற உதவி பேராசிரியர்களுக்கு மாசம் 8000 ஊதியம்.. இன்னும் நிறைய!
ஒரே விஷயம் என்னதுன்னா, பணம் சம்பாதிக்குறதுக்கு பெரிய படிப்பெல்லாம் தேவையில்லை. காலம் மாறிப்போச்சு..
ரஷ்யா நாட்டோட அதிபரா இருந்த ஸ்டாலினோட அப்பா செருப்பு தைக்குற தொழிலாளியா வாழ்ந்தவரு...
Thursday, October 22, 2015
தி சாஷான்க் ரிடம்ப்ஷன்
Tuesday, September 8, 2015
நாகர்களின் ரகசியம்
4000 வருடங்களுக்கு முன்பு மனிதனாக வாழ்ந்த ஒரு மனிதர், இன்று கடவுளாக வணங்கப்படுகிறார். அந்த மனிதரின் வாழ்க்கைப் பயணித்தினூடே நிகழும் சம்பவங்கள் நம்மை திகைக்க வைக்கிறது. பிரகஸ்பதியுடனான நட்பு, சதியுடனான திருமண வாழ்க்கை, சதியின் தந்தையார் செய்யும் மாயவலை சூழ்ச்சிகள் என்று கதை செல்லும் விதமே வியப்பில் ஆழ்த்துகிறது. நாகர்களையும் அவர்களின் அங்ககீனமான தோற்றத்தையும் குறிப்பிட்டு அவர்களின் மீதான வெறுப்பை உண்டாக்கும் பட்சத்தில், கிராமத்தில் புகுந்த புலிகளைக் கொன்று மக்களை காப்பாற்றச் சென்ற இளவரசி சதியை 'நாகா' உயிரை பணயம் வைத்து காப்பாற்றும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.
அதன்பிறகான உரையாடலில் 'நாகா' சதியின் கருவில் பிறந்த குழந்தை என்று தெரியவரும்போது, நம்மை ஆச்சரியத்தில் மிதக்கவிடுகிறது. அதன் பிறகு அவிழும் ரகசியத்தின் முடிச்சுகள் புத்தகத்தை கீழே வைக்க முடியாத அளவு செய்கிறது. சிவபெருமானின் புராண வரலாற்றை புதிய கோணத்தில் எழுதி நம்மை ஆச்சரியத்தில் மிதக்க விடுகிறார் எழுத்தாளர் அமிஷ்.
'நாகா' பற்றிய ரகசியத்தை சிவனிடம் சதி சொல்லும் காட்சிகள், நாகா -வினுடைய கரங்களில் ஒருவித சின்னத்தைப் பார்த்தவுடன் அடையும் பதற்றம், அதன் பிறகான சிவனின் கோபம் என்று அடுத்த கட்டமான கதைக்களம் செல்லும். பிரகஸ்பதியின் ரகசியத்தை தேடி கங்கை நதி தீரத்தில் கப்பலில் செல்லும்போது சிவனும் அவனுடைய பரிவாரங்களும் மலைக் காடுகளில் 'பரசுராமருடன்' சண்டையிடும் காட்சிகள் வாசிப்பில் புதியதொரு அனுபவம். 'சோமரச பானம்' புதினத்தில் ஏற்படுத்தும் பிரமிப்பு, சதியின் குழந்தை பிறக்கும்வரை பரவசத்தில் ஆழ்த்துகிறது.
சிவனின் குழந்தை ஏதைச்சையாக கோயிலுக்குள் விளையாடும்போது, சிங்கங்களின் தாக்குதலிருந்து 'நாகா' தன்னுடைய உயிரைப் பணையம் வைத்து மீட்கும் காட்சி அற்புதம். அதன்பிறகு நாகாவின் மீது சிவனின் பரிவு கதையின் நெருடல். உணர்ச்சிமயமான எண்ணங்களை வெளிப்படுத்திய வண்ணம் சிவன் இருப்பார்.
புதினத்தில் மனுதர்மத்தை உருவாக்கிய 'மனு' தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த நிகழ்வு யுகத்தின் பயணம். சிவபக்தனாகிய எனக்கு 'மெலுஹாவின் அமரர்கள்', 'நாகர்களின் ரகசியம்' புதியதொரு வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தியது. மூன்றாவது தொகுதியான 'வாயுபுத்ரா'வின் தமிழ் பதிப்பு இந்த செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது!
குமணன்
அண்ணன், தான தருமம் செய்து நற்பெயர் வாங்கியது குமணனின் தம்பி
இளங்ககுமணனுக்குப் பிடிக்கவில்லை. பொறாமை நெஞ்சில் தீயாகத் தகிக்க, அண்ணணனைக் காட்டிற்கு விரட்டி விட்டு நாட்டைப் பிடுத்துக் கொண்டான். காட்டில் குமணன் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தான். புலவர்கள் எல்லாரும்
ஈதல் யாருமின்றி மிகவும் வறுமையில் வாடினர்.
பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் வறுமையைத் தாங்க முடியமால் காட்டில் குமணனைத் தேடி அலைந்தார்.
குமணனும் துன்பத்தில்தானே காட்டில் திரிகிறான். அவனால் புலவருக்கு என்ன தரமுடியும்? இருந்தாலும் தன்னைப் பாடிய புலவரை வெறுங்கையுடன் அனுப்ப மனமின்றித் தனது வாளைக் கொடுத்து, தனது தலையைக் கொய்து கொண்டுபோய் இளங்குமணனிடம் கொடுத்தால் பரிசு தருவான், வாங்கி பசியாறுங்கள் என்கிறான் குமணன்.
ஆனால் புலவர் குமணனின் வாளை மட்டும் வாங்கிக்கொண்டு இளங்குமணனிடம்
கொண்டு போய்க் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின் இரு குமணன்களும் என்னவானார்கள் என்று தெரியவில்லை.
நாடகம் ஒன்றில் மட்டும்,
குமணனிடம் வாளை வாங்கிய புலவர், வாழை மரத்தின் அடிவேரில் தலைபோல் செய்துகொண்டு போய்க் காட்டியதாகவும், அது கண்டு இளங்குமணன் துணுக்குற்று மனம் திருந்தி அழுததாகவும் பிறகு புலவர் உண்மையை உரைக்கக் காட்டில் திரிந்த குமணனை மீண்டும் அழைத்து வந்து நாட்டுக்கு அரசனாக்கினான் என்றும் கூறுகிறது.



