Wednesday, July 24, 2013

உச்சத்தில் நிறுத்திய கடிதம்!

முதல் உலகப்போருக்குப்பின் ஏற்பட்ட தோல்வியால்
கோபக்கனலாய் இருந்தார் வின்ஸ்டன் சர்ச்சில்.தமது
கட்சியினர் - எதிர்க்கட்சியினர் என அனைவரையும் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தார்.

சர்ச்சில் மீது அனைவருக்கும் வெறுப்பு ஏற்பட்டது.அவர் மீது கோபத்தை வெளிக்காட்ட இயலாமல் அதே வேளையில் அவரை மரியாதை இல்லாமல் பலரும் பேசவும் ஆரம்பித்தனர்.

மகத்தான போர்வீரர் - பாராளுமன்ற உறுப்பினர் - மேடைப்
பேச்சாளர் - எழுத்தாளர் - சிந்தனையாளர் - விளையாட்டு வீரர்
என அரசியல் தளத்திலும் - இலக்கியத் தளத்திலும் தான்
மிக உயரத்தில் வைத்துள்ள வின்சென்ட் சர்ச்சிலுக்கு
அவரது சூழலை உணர்த்த விரும்பினார் பெர்னாட்ஷா..

அவருக்கு ஒரு கடிதம் எழுதினார்-
எனது புதிய நாடகம் ஒன்று நடைபெற உள்ளது
இத்துடன் இரண்டு நுழைவுச் சீட்டுகளை
அனுப்பியுள்ளேன்.ஒன்று உங்களுக்கு..
இன்னொன்று உங்கள் நண்பருக்கு..
அப்படி யாராவது இருந்தால்!

இதைப்பார்த்து உணர்ச்சிவசப்பட்டார் சர்ச்சில்.
காட்டசாட்டமாக பதிலும் எழுதினார்.பின்பு ஆழமாகச்
சிந்தித்தார்-புதுவியூகம் அமைத்தார் - பின்னாளில்
அரசியல் தளத்தில் இங்கிலாந்தின் பிரதமரானார்.
இலக்கியத் தளத்தில் நோபல் பரிசு வென்றார்.

No comments:

Post a Comment