Tuesday, July 23, 2013

சொற்களுக்காக வாழ்ந்த மனிதர் - சாக்ரடீஸ்

மரண தண்டனை பெற்ற விஷக்கோப்பையைக்
குடிக்கத் தயாராகிக் கொண்டிருந்த சாக்ரடீஷின் முன்
வந்து விழுந்தது துண்டு சீட்டு.

அவருடைய நபிக்கைக்குரிய நண்பர்கள்
அனுப்பியது தான் என்பதை உறுதி செய்து கொண்டார் சாக்ரடீஸ்!!

கடுமையான காவலைத் தாண்டி அவரைத் தப்புவிக்க
வழிமுறையும் - வழிகாட்டியும் அதில் இருந்தன.
அதைத் தொடர்ந்து எதிர்காலத்தில் பாதுகாப்பாய் அவர் வாழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அறிந்தார் சாக்ரடீஸ்.

அவர் அதற்கு உடன்பட மறுத்தார்.தம் நண்பர்களுக்கு பதில் அனுப்பினார்-
"ஏதென்ஸ் நகர மக்களின் நல்வாழ்க்கைக்காக,நாளும் பேசி, அவர்களை சிந்திக்க வைக்க நாம் இந்தத் தவற்றைச் செய்தால் அது முன் மாதிரியாக அமையாது.இந்த நகரச் சட்டத்திற்குட்பட்டு நான் சாவைத் தழுவிக் கொள்வதில் பெருமையடைகிறேன்!!".

No comments:

Post a Comment