Tuesday, July 23, 2013

நாட்டைக் காக்கும் நல்லவர்கள் அவனைப் பார்த்துக் கொள்வார்கள்

1928 - ம் ஆண்டு திருச்சியில் 'வெள்ளையனே வெளியேறு' போரில் கலந்துகொண்ட சின்னையாமன்றாயர் கைது செய்யப்பட்டு சிறைக்கம்பிகளுக்குள்  நுழையும்போது ஒருவர் ஓடிவந்து விழுப்புரத்தில் அவர் மனைவி ராஜமணியம்மாள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த இனிய செய்தியைச் சொல்ல...
மகிழ்ச்சி ஒருபுறம்,மகனை அள்ளி எடுத்து முத்தமிட முடியவில்லையே என்ற ஏக்கம் ஒருபுறம்,இருந்தாலும் அவர் வாய் மலர்ந்து;"நாட்டைக் காக்கும் நல்லவர்கள் அவனைப் பார்த்துக் கொள்வார்கள்" என்று நண்பனிடம் கூறிவிட்டு 
சிறைபுகுந்தார்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பிறந்தபோது பெற்ற முதல் வாழ்த்து,
அதுவும் தந்தையின் வாழ்த்து,இந்த முதல் வாழ்த்து செய்தியே எத்தனை அர்த்தம் பொருந்தியது பாருங்கள்."நாட்டைக் காக்கும் நல்லவர்கள் அவனைப்  பார்த்துக் கொள்வார்கள்".ஆமாம் அவர் பிறந்தது முதல் அரசு மரியாதையுடன் இயற்கையுடன் இயற்கையானது வரை பெரியார்,அண்ணா, கருணாநிதி, காமராஜர்,இந்திராகாந்தி,எம்.ஜி.ஆர்,ராஜீவ்காந்தி வரை நாட்டைக் காத்த 
எத்தனை நல்லவர்களின் ஆதரவு அவருக்கு இருந்தது என்பதைச் சற்று 
எண்ணிப் பார்த்தாலே தெரியும்.

வலைப்பூ:www.sevaliye-sivaji.blogspot.com

No comments:

Post a Comment