Thursday, July 25, 2013

இலட்சியத்திற்கான தியாகம்!

சிந்து நதிக்கரையில் போரஸ் மன்னனை வீழ்ச்சி அடைய வைத்து விட்டு நிமிர்ந்து நின்றார் அலெக்ஸாண்டர்.படைகள் தளர்ச்சி அடைந்தன.படைகளை திருப்பலாம் என மன்னனிடம் முறையிட்டார்.

இந்தியா முழுவதையும் வென்று விட்ட பிறகே தாய்நாடு திரும்புவேன் என்பதில் உறுதியாக இருந்தார் அலெக்ஸாண்டர்.

படை ராஜஸ்தானில் மாட்டிக்கொண்டது.
அனைவரும் தங்களுக்குள்ளே முணுமுணுக்க ஆரம்பித்தனர்.இரக்கம் அற்றவர்;இதயத்தை ஏததென்சிலேயே இறக்கிவைத்தவர்..இப்படி திட்டிக் கொண்டே நடந்தனர்.இப்போது ஒரு பள்ளத்தில் கொஞ்சம் தண்ணீர் இருப்பதை கண்ட வீரன்...
மணலில் இருந்து அதைப் பிரித்து,தம் இரும்புத் தொப்பியில்
அள்ளி தம் தலைவனிடம் நீட்டினான்.

அலெக்ஸாண்டர் சொன்னார்:
இந்தத் தண்ணீரைவிட ஈரப்பசை மிக்க
உள்ளம் வாய்ந்த என் அன்புத் தோழனே!நன்றி.
எல்லோரும் குடிக்க நீர் இருந்து.குடித்த பின்
எஞ்சியிருந்தால் மட்டுமே நான் குடிப்பேன்.
இல்லையேல் எல்லோரோடும் சேர்ந்து இறந்துபோவேன்
வீரர்கள் சிலிர்த்தனர்;தம் தலைவனைப் புகழ்ந்தனர்.

No comments:

Post a Comment