இயற்கை வளத்தோடு கூடிய பசுமையான இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா உலகையே வெல்ல வேண்டும் என்ற சுவாமி விவேகானந்தரின் கனவை நனவாக்குவோம். பாரதமே விழித்தெழு, உலகை ஒளியூட்டச் செய்..
Tuesday, August 15, 2023
கோரக்கர் சித்தர் - கனகசபை
Wednesday, August 9, 2023
பொன்னியின் செல்வன் - இயக்குநர் மணிரத்னம்
"பொன்னியின் செல்வன்" எனும் வரலாற்றுப் புதினத்தை எழுதிய எழுத்தாளர் கல்யாண கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தனது பெயரை சுருக்கி கல்கி என வைத்துக் கொண்டார். ஸ்ரீமந் நாராயணின் பத்தாவது அவதாரம் எனச் சொல்லப்படும் "கல்கி அவதாரம்" பெயரினை திருமாலின் மீது கொண்ட பக்தியின் காரணமாக கல்கி என்ற புனை பெயருடன் கல்கி இதழில் பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தை எழுதியதால் லட்சோப லட்சம் வாசகர்கள் கல்கி எனும் பெயரினை மந்திரச் சொல்லாக இன்று வரையிலும் பேசிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.
இந்திய திரையுலகின் நட்சத்திர இயக்குநர் மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படம் ஏப்ரல் 28ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீசாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடியது. மாவீரன் நெப்போலியனின் நினைவு தினமான மே 5ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று.. கோவை புறநகரிலுள்ள காமாட்சிபுரம் ஊரில் அமைந்த SRK Miraj எஸ்.ஆர்.கே மிராஜ் சினிமாஸில் நண்பகல் காட்சிக்குச் சென்று பார்த்தது. படத்தின் சென்ஸார் தேதி ஏப்ரல் 11 என்பதைக் கண்டது.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படம், முதல் பாகத்தைவிட கலைநயமுடன் சிறப்பாக இருந்தது. முதல் பாகத்தில் ரஹ்மானின் மியூசிக் எங்கே கேட்கிறது என்று தேடியதுபோல இல்லாமல், இரண்டாம் பாகம் படத்தில் முழுமையான இசையை கேட்க முடிந்தது ஒரு ஆறுதல் என மட்டுமே சொல்லலாம். தெலுங்கு மொழியில் உருவாகி பல மொழிகளில் வெற்றிகரமாக ஓடிய பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி ஐயாபோல.. ரஹ்மான் இசையமைத்தார் என்று ஒப்புக் கொள்ள முடியாது. பாகுபலி படத்தின் மிகப்பெரிய பலமே பிரமிக்க வைக்கும் இசையமைப்பு என்பதை சின்னக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேசியதை கேட்டதுண்டு.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாட்ஷா படத்தின் வெள்ளி விழா நடந்த ஜூலை 14 அன்று, காமிக்ஸ் படம் வரையும் அம்புலிமாமா பையனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடுவதை இயக்குநர் ஷங்கர்.. சங்கர் சிறந்த பொழுதுபோக்கு படம் என படம் பார்த்து பாராட்டிய பிறகு அறிய முடிந்தது. படத்தின் சென்ஷார் தேதி ஜூலை 10. இந்த ஜூலை 10 அன்று பம்பர் படத்தை கோவை சித்ரா விமான நிலையம் அருகிலுள்ள பிராட்வே சினிமாஸில் இரவுக் காட்சி பார்த்தபோது.. சென்ஷார் தேதி ஏப்ரல் 11 செவ்வாய்கிழமையாக இருந்ததை கண்டது.
2023ம் ஆண்டில் ஏப்ரல் 11, ஜூலை 11 இரண்டு தினங்கள் மட்டுமே செவ்வாய்கிழமை. ஜூலை 11.. பிரிட்டீஷாரின் ஏஜெண்டான மருதநாயகம் படைகளை தீரமுடன் எதிர்த்துப் போராடிய மாவீரன் அழகுமுத்துகோனின் பிறந்த தினம். ஜூலை 18.. செவ்வாய்கிழமை, மாவீரன் அழகுமுத்துகோனின் நினைவு தினம். இப்படியாக, மாவீரன் அழகுமுத்துகோனின் நினைவு தினமன்று கேரளா மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி அவர்கள் சிவபதவி அடைந்ததை கண்டது.
கேரளா மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற சபரிமலை கோவிலில் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய சென்ற தமிழ்நாட்டு இளைஞன் ஒருவன் இஸ்லாமிய பெரியவரிடம் வாங்கிய ஒரு லாட்டரியில் கோடி பணம் பம்பர் பரிசாக விழுவதை மையமாக கொண்டது பம்பர் படம். ஆக, பொன்னியின் செல்வன் 2ம் பாகமும், பம்பர் படமும் தொப்புள்கொடி உறவுபோல இணைந்த கைகளாக இருப்பதைக் கண்டு பிரமிப்பூட்டியது.
Monday, August 7, 2023
பிரம்மஸ்ரீ சிவராஜ யோகி சுவாமிகள் ஜீவசமாதி - கரிவலம்வந்தநல்லூர்
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் ஊரில் சங்கரநாராயண சுவாமி கோவிலின் பின்புறம் ஸ்ரீவேலப்ப தேசிகரின் ஜீவசமாதி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிவதுபோல.. சங்கரன்கோவில் ஊரிலிருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் அமைந்த ஊர் கரிவலம்வந்தநல்லூர். இந்த ஊரில் சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்கினி ஸ்தலமாக விளங்கும் பால்வண்ணநாதரின் கோவிலின் பின்புறம் பிரம்மஸ்ரீ சிவராஜ யோகி சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்து தன்னை நாடி வரும் பக்தர்களின் குடும்பத்தினருக்கு சிறந்த நண்பனாக இருக்கிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 வியாழன்று.. நடுப்பகல் சூரிய வெளிச்சத்தில் பிரம்மஸ்ரீ சிவராஜ யோகி சுவாமிகளின் ஜீவசமாதிக்கு விஜயமானபோது.. ஜீவசமாதி 1945ம் ஆண்டு, பிப்ரவரி 5, மாசி மகம் என்பதை ஜீவசமாதி நுழைவாயிலில் கண்டது.
1945ம் வருடம் என்பதை கண்ட பிறகு.. கோவை அவிநாசி சாலையிலுள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி 1945ம் ஆண்டு ஜி.டி.நாயுடு என அழைக்கப்படும் கோபால்சாமி துரைசாமி நாயுடு அவர்களால் தொடங்கப்பட்ட வரலாறு மனதில் ஞாபகமாக சுழன்றது. 2006ம் ஆண்டு தொடங்கி ஏழு ஆண்டுகள்.. 2013ம் வருடம் வரை, இந்த கல்லூரி மைதானத்தில் காலை வேளை ஓடுதல், ஊஞ்சலில் தொங்கி விளையாடுதல் என உடற்பயிற்சி செய்தமையால் எனது வாழ்வுடன் இரண்டறக் கலந்த கல்லூரியாக இருந்தமையால், 1945ம் ஆண்டு என்பது மின்னலென ஞாபகம் வந்தது.
கோவை மாவட்டத்திலுள்ள சூலூர் எனும் பெரிய ஊரின் அருகிலுள்ள கலங்கல் என்ற சிறிய கிராமத்தில் விடுதலை வீரன் பகத்சிங் பிறந்த நாளன்று பிறந்து ஆங்கிலேய அதிகாரி ராபர்ட் ஸ்டேன்ஸூடன் டூவீலர் வண்டியில் கோவை நகரம் வந்த கோபால்சாமி துரைசாமி நாயுடு அவர்கள் பஞ்சாலையை நடத்தும் அதிபராக உயர்ந்து அறிவியலில், விவசாயத்தில் எண்ணற்ற கண்டுபிடுப்புகளை செய்து கோவை நகரம் ஒரு பெரிய தொழில் நகரமாக வளர்வதற்கு கிரியா ஊக்கியாக இருந்தவர் என்பதால், கோபால்சாமி துரைசாமி நாயுடு சரித்திரத்தில் இடம் பெற்றார்.
Sunday, August 6, 2023
ஸ்ரீநரசிம்மா அவதாரம் - பேரூர் பட்டீஸ்வரர் கோவில்
கோவை புறநகரின் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த பேரூர் பச்சைநாயகி அம்மன் சமேத பட்டீஸ்வரர் கோவில். இந்தக் கோவிலின் பச்சைநாயகி அம்மன் சந்நிதி வலது புறமாக கஞ்சி வரதராஜ பெருமாள் அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் வரதராஜ பெருமாளின் ஆன்மீகப் பேராற்றலை இங்கு அருள்புரியும் வரதராஜ பெருமாளிடம் தரிசனம் செய்கையில் பெறுவதை அகத்தில் உணர முடியும். தீமைகளை அழித்து தர்மத்தை நிலைநாட்ட யுகங்கள் தோறும் அவதரிக்கின்ற அவதார புருஷன். வரதராஜ பெருமாளின் சந்நிதி முன்பாக ஸ்ரீமந் நாராயணனின் பத்து அவதாரங்களை குறிக்கும் வண்ண ஓவிய படங்கள் கண்ணாடி பேழைகளில் வைக்கப்பட்டு இதைக் காணும் பக்தர்களை பரவசம் கொள்ளச் செய்கிறது. மினர்வா கிளாஸ் ஹவுஸ் எனும் கடை வைத்துள்ள ஸ்ரீமந் நாராயணின் பக்தர் இந்த ஓவிய படங்களை செய்து கோவிலுக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளதை கண்ணாடி பேழையில் பார்க்க முடிகிறது.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நூறாவது தடைவையாக பேரூர் பட்டீஸ்வரரை தரிசனம் செய்ய வருகையில்.. காஞ்சி வரதராஜ பெருமாளின் முன்பு ஓவியத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீநரசிம்மா அவதாரம், கோவை நகரின் அவிநாசி சாலையிலுள்ள ஸ்ரீவரதராஜ மில்ஸின் எதிர்புறமுள்ள சக்தி கிளாஸ் அன்ட் பிளைவுட்ஸ் கடையின் முன்புறமுள்ள மேம்பால தூணுடன் தொப்புள் கொடி உறவாக இணைத்துள்ளதை கண்டு பிரமிப்பூட்டியது. ஆக, ஸ்ரீநரசிம்மா அவதாரம் இந்த ஆண்டின் ஜூன் 03, ஜூன் 04 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவதார மூர்த்தியாக தூணை பிளந்து கொண்டு அவதரித்து அசுர குணம் படைத்த ஹிரண்யகசிபுவின் குடலை உருவி தனது புஜத்தில் மாலையாக போட்டுக் கொண்டு ஏழு கண்டங்களும் குலுங்கும்படியாக சிம்ம கர்ஜணை புரிந்ததை அகத்தில் காண முடிந்தது.
ஓம் நமோ நாராயணா.. ஓம் நமோ நாராயணா..
Saturday, August 5, 2023
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் - ஸ்ரீநரசிம்மா அவதாரம் - மார்ச் 10 - வெள்ளிக்கிழமை
கோவை புறநகரின் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள பேரூர் பச்சைநாயகி அம்மன் சமேத பட்டீஸ்வரர் கோவில் "மேலைச் சிதம்பரம்" என பக்தர்களால் அழைக்கப்படும் அகில இந்திய அளவில் புகழ் பெற்ற கோவிலாகும். மகாத்மா காந்தி, ஜெயபிரகாஷ் நாராயணன், காமராஜர் போன்ற அரசியல் பெருந்தலைவர்களின் அஸ்தி வைத்து கட்டப்பட்ட கல்லறை நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் எந்த அளவிற்குச் சிறப்பு வாய்ந்தது என்பதை நமக்குச் சொல்கிறது.
இந்த ஆண்டின் மார்ச் 10, வெள்ளிக்கிழமை.. மாலை வேளை.. ஆர்ப்பரிக்கும் அட்லாண்டிக் கடலுக்குள் புதைந்துபோன அல்கொய்தா இயக்கத் தலைவன் ஒஸாமா பின்லேடனின் பிறந்த தினம். கோவை நகர்மண்டபம் பஸ் நிலையமிருந்து பேரூர் செல்லும் பஸ்ஸில் ஏறியபோது நண்பர் ரவிகாந்தனும் ஏறிய பின்பு இவரைக் காண ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்த மகிழ்ச்சி உண்டானது. முத்துவீரப்பன் எனும் கேரக்டரில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த வீரா படத்தில் நகைச்சுவை நடிகர் செந்திலின் பெயர் ரவிகாந்தன் என்பதை நண்பரிடம் ஞாபகப்படுத்தி சொன்னபோது.. ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனர் போல.. நரன், நரேன் எனும் நரநாராயணர்கள் எனபதுபோல, நம்முடைய நட்பு காலம் கடந்தும் உயிருள்ளதாக இருப்பதைச் சொல்லி பேசிக் கொண்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினி போலவே முகத்தோற்றம், அவரைப் போன்று கருப்பு நிறம் முகமுடன் காட்சி தரும் சூர்யகாந்தனை "ரவிகாந்தன்" என்றே அழைப்பேன். சத்தியமங்கலம் ஊரிலுள்ள ஸ்ரீபாரியூர் அம்மன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிலரங்கு நடத்துவதற்கு ஒன்றாகச் சென்ற நாட்களின் நினைவுகளை நண்பர் ரவிகாந்தனிடம் சொன்னபோது.. கே.பாலச்சந்தர் இயக்கிய "உன்னால் முடியும் தம்பி" படம் ரிலீசான 1988ம் ஆண்டில் ஆகஸ்டு 12, பிப்ரவரி 12 இரண்டு நாட்களுமே வெள்ளிக்கிழமை என்பதுபோல..
நண்பர் சூரியகாந்தன் எனும் ரவிகாந்தன் செல்வபுரத்தில் இறங்கி கொண்டார். பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு விஜயமான வேளை.. நுழைவாயிலில் நந்தி அருகிலுள்ள வலதுபுறம் தூணில் ஹிரண்யகசிபுவை வதம் செய்யும் நரசிம்மா அவதார சிற்பத்தினை நூறாவது தடவையாக பார்க்கும் பாக்கியம் அமைந்து.. ஹிரண்யகசிபுவின் மகன் பக்த பிரகலாதனை போன்று "ஓம்.. நமோ நாராயணா" என்ற மந்திரத்தை முப்பது முறை சொல்லி மகிழ்ந்தது.
🐅ஓம்.. நமோ நாராயணா.. ஓம்.. நமோ நாராயணா..
Sunday, July 30, 2023
சூரிய கிரஹனம் - விஜயாபுரி - செவ்வாய்கிழமை
கடந்த 2022ம் வருடம்.. அக்டோபர் 25, செவ்வாய்கிழமை. மாலையில் சூரிய கிரஹனம் தமிழ்நாட்டில் தெரியும் என்று வானிலை மண்டல இயக்குநர் அலுவலகம் டிவியில் சொன்னதை, இணையமான டுவிட்டரில் கண்டது. கரிவலம்வந்தநல்லூர் செல்லும் சாலையில் அமைந்த நடுவப்பட்டி ஊருக்கு மதியம் 12 மணிபோல டூவீலரில் சென்றது. எனது குளக்கட்டாக்குறிச்சி ஊரிலிருந்து வடக்கு திசையில் நான்கு கிலோ மீட்டர். நண்பரை பார்த்து சந்தித்து பேசிவிட்டு எங்கு செல்லலாம் என எண்ணியபோது.. பள்ளி வகுப்பு நண்பனை காண விஜயாபுரி செல்லலாம் என கிளம்பியது. கோவில்பட்டி நகரிலிருந்து எட்டையாபுரம் செல்லும் சாலையில் பயணித்து தெற்கு திட்டங்குளம் ஊரினை கடந்து வலது புறமாக திரும்பி ஐந்து கிலோ மீட்டர் பயணம் செய்தால் விஜயாபுரி ஊரினை அடையலாம். இப்படியாக, பயணம் செய்து வந்தது.
மாலை வேளை.. சூரிய கிரஹணம் நடைபெறும் என்பதால் ஸ்ரீவெங்கடாசல பெருமாள் கோவிலின் நடை சாத்தப்பட்டு பூட்டியிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களின் நடை பூட்டியிருப்பதை டுவிட்டர் செய்தியில் கண்டது. மாலை 05:30 மணி. ஊருக்குள் நுழையும்போது குருமலை அடிவாரத்தின் கீழே சூரிய கிரஹணம் தெளிவாக தெரிந்ததை கண்டு பிரமிக்கச் செய்தது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலின் பின்புறம் சாலையில் அமைந்த விஜயாபுரி காம்ப்ளக்ஸில் அமைந்த செண்பகா நூலகத்தில் மார்ச் 04 அன்று எழுத்துச் சித்தர் பாலகுமாரன் எழுதிய "கர்ணனின் கதை" நாவலின் மூன்றாம் பதிப்பு நூலினை ரூபாய் 65க்கு வாங்கியதை.. மனதில் நினைவாக சுழன்றபோது, பாலகுமாரன் அவர்களை எழுத்துச் சித்தர் என கோடான கோடி வாசகர்கள் அழைக்கிறார்கள் என்பதை எண்ணி பிரமிப்பூட்டியது.
2022, மார்ச் 4 - வெள்ளிக்கிழமை.. திதி பிரகாரம் ஸ்ரீராமகிருஷ்ணர் அவர்களின் பிறந்த தினம்.. சுவாமி விவேகானந்தர் அவர்களை உலகிற்கு அடையாளம் காட்டிய குரு எனச் சொல்வார்கள்.
மூன்றாம் பாதிப்பு - 2011, பிப்ரவரி.. விடுதலை வீரன் வாஞ்சிநாதனின் நூற்றாண்டு நினைவு ஆண்டில் வெளியான மூன்றாம் பாதிப்பு நாவல் என்பதை மார்ச் 4 அன்று செண்பகா நூலகத்தில் வாங்கும்போது நண்பரிடம் சொன்னேன். 2017ம் ஆண்டு கர்ணனின் கதை நூலினை கண்டேன். பின்பு ஒரு வாரம் கழித்து நூலை வாங்கலாம் என வந்தபோது வாசகர் ஒருவர் இரவலாக எடுத்துச் சென்றதை அறிய.. இன்று இந்த நூலை கண்டு மிகவும் பாக்கியமாக அமைந்ததை சொன்னேன்.








